கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து இன்று தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தேனியில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், அம்மாவின் தொண்டர்கள் மடியிலே கனமில்லாதவர்கள்.

நெஞ்சிலே வீரம் மிக்கவர்கள். இங்கே இருப்பவர்கள் தொண்டர் படை, அங்கே இருப்பவர்கள் குண்டர் படை, டெண்டர் படை தான் அங்கே இருக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் என குறிப்பிட்டு டிடிவி தினகரன் தன்னுடைய பேச்சை தொடங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் அமமுக கட்சிணரும் கலந்து கொண்டனர்.