சென்னை தியாகராய நகரில் உள்ளது செட்டிநாடு அசைவ உணவகம் விருதுநகர் அய்யனார் ஹோட்டல். இந்நிலையில் இந்த ஹோட்டலில் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து  வாடிக்கையாளர்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்திருந்தனர். இதனால் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் நேற்று மாலை சரியாக 3 மணிக்கு உணவகத்தில் ஆய்வு நடத்தினர்.

அப்போது உணவகத்தில் இருந்த சாம்பாரில் பிளாஸ்டிக் பாக்கெட் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உணவக உரிமையாளரை எச்சரித்தனர். மேலும், உணவகத்திற்கு சீல் வைக்கவும், உரிய விளக்கம் கோரி உரிமையாளரிடம் நோட்டீஸ் வழங்கி சென்றுள்ளனர்.