சென்னை கிழக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் எஸ் எஸ் சுப்பையா பொதுவெளியில் மது ஒழிப்பு குறித்து பேசிவிட்டு தன்னுடைய உணவகத்திற்குள் மது அருந்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்நிலையில் இது தொடர்பான வீடியோவை திட்டமிட்டு பரப்பியதாக அதே மாவட்டத்தை சேர்ந்த பாஜக ஐடி பிரிவு செயலாளர் ராஜேஷின் வீட்டிற்கு ஆதரவாளர்களுடன் சென்ற சுப்பையா அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.

அதில் பலத்த காயம் அடைந்த ராஜேஷ் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சுப்பையா மீது அவதூறாக பேசுதல் மற்றும் தானாகச் சென்று தாக்குதல் நடத்தியது மற்றும் மிரட்டல் விடுத்தல் ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.