ஈரோடு மற்றும் திருப்பூர் அதிமுக தொண்டர்களையும் மக்களையும் சந்திக்க இரண்டு நாள் பயணமாக சசிகலா சென்றுள்ளார். அதன்படி நேற்று திருப்பூர் சென்று இருந்த அவர் வளர்மதி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய சசிகலா, அதிமுகவின் அனைத்து அணிகளையும் ஒற்றுமை படுத்துவதே என்னுடைய பணி. பாஜகவுடன் கூட்டணி தொடரும் என ஓபிஎஸ் கூறியது அவரது தனிப்பட்ட முடிவு. அதில் நான் எப்படி தலையிட முடியும்? மக்களின் பார்வையில் அதிமுக தான் எதிர்க்கட்சியாக உள்ளது என்று சசிகலா தெரிவித்துள்ளார்.