மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தில் மெய்தி இனத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி அவரின் அந்தரங்க பாகங்களை வலுக்கட்டாயமாக தொட்டு இழுத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்திய பெண்கள் யாரும் இனிமே பிஜேபிக்கு ஓட்டு போடமாட்டாங்க என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அரசை கண்டித்து இன்று காலை 10 மணி அளவில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் மகளிர் அணி சார்பில் நடைபெறும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் நடத்த உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.