அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பிரேமலதா விஜயகாந்த் வெளிப்படையாக பேசியுள்ளார். அதாவது அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்று முதல் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும் ராஜ்யசபா சீட்டு கேட்பது எங்கள் உரிமை, எங்களுக்கு கொடுக்கவில்லை என ஊடகங்களில் செய்திகள் வரத் தொடங்கியுள்ளது.

அது உறுதி செய்யப்படாத செய்தி. அதிமுக மற்றும் பாஜக சார்பில் இரண்டு தரப்பிலும் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளோம். வெகு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்று பிரேமலதா கூறியுள்ளார்.