அண்ணா நூலகத்திலிருந்து புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்கு 6 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் உள்ள நிலையில் ஒரு லட்சம் புத்தகங்களை வாசகர்கள் ஆவணங்களை கொடுத்து வீட்டுக்கு கொண்டு செல்லலாம். 2010 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நூலகத்தில் குறிப்பு எடுக்க மட்டுமே இதுவரை அனுமதி வழங்கப்பட்ட நிலையில் மார்ச் 12 முதல் புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.