தமிழக மீனவர்களை அத்துமீறி கைது செய்த இலங்கை கடற்படை அட்டூழியம் செய்துள்ளது. இன்று தனுஷ்கோடி மற்றும் நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 28 பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மண்டபம் மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 28 மீனவர்களை கைது செய்து அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.