திருவள்ளூர் மற்றும் திருநின்றவூர் ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அக்டோபர் 15ஆம் தேதி இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2.15 மணி வரை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருவள்ளூர் மற்றும் திருநிற்றவூர் இடையே இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுவதால் சென்னை சென்ட்ரல், கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர், அரக்கோணம் மற்றும் திருத்தணிக்கு காலை 9.10 மணி முதல் பகல் 1.10 மணி வரை செல்லும் மின்சார ரயில்கள் பட்டாபிராம், நெமிலிச்சேரி, வேப்பம்பட்டு மற்றும் செவ்வாபேட்டை சாலை ரயில் நிலையத்தில் நிற்காதே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.