வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

இந்த தாக்குதலில் பெண் அதிகாரி உட்பட 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்கு உதாரணம். மேலும் சோதனையோடு நின்று விடாமல் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இபிஎஸ் கூறினார்.