தற்போது கோடை விடுமுறை என்பதால் கொடைக்கானலில் மலர் கண்காட்சியை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் அங்கு கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. அதோடு மலைச் சாலையில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. நெரிசலை கட்டுப்படுத்த வாகன நிறுத்த இடங்களை ஏற்படுத்தி தர கோரி சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.