ராஜஸ்தானில் உள்ள மல்லாராம் பாவாரி என்ற விவசாயி, பருத்திப் பயிர் செய்ய வங்கியில் கடன் வாங்கினார். ஆனால், கனமழை காரணமாகப் பயிர் முழுவதும் நாசமானது. ​பயிர் காப்பீட்டுக்காகப் (Insurance) புகார் கொடுத்தும், எந்த அதிகாரியும் வந்து பார்க்கவில்லை.

இதனால் கோபமடைந்த அவர், நூதனமாகப் போராட முடிவு செய்தார். தன் நாசமான வயலில் ₹500 ரூபாய் நோட்டுகளை நடும் காணொளியை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானதால், அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை வைக்கின்றனர்.