விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார் குப்பம் கிராமத்தில் கள்ளச் சாராயம் குடித்து 14 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 42 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவில் 10 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வரக்கூடிய 42 நபர்களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்த கோரி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி போராட்டம் மேற்கொண்டால் அவருடன் இணைந்து நாங்களும் போராட்டத் தயார் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.