செங்கல்பட்டு விஷ சாராயம் குடித்து 7 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி விஜயகுமார் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் ஏற்கனவே அமாவாசை உள்ளிட்ட 5 பேர் கைதாகி சிறையில் இருக்கின்றனர். விஜயகுமார் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாஜக ஓபிசி அணி தலைவராக செயல்பட்டு வந்தவர். அவர் கைதான சில நிமிடங்களிலேயே பாஜகவில் இருந்து நீக்கப்பட்டதாக கட்சி அறிவித்துள்ளது.