அண்ணாமலையை நாங்கள் ஜோக்கராகத்தான் வைத்துள்ளோம் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்ற “வள்ளலார் 200” என்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அடுத்த 8 மாதம் ரணகளமாக இருக்கும் என அண்ணாமலை கூறியது குறித்து கேள்வி எழுப்பியபோது, அதுபோன்று வேறு மாநிலத்தில் வேண்டுமென்றால், அவர்கள் செய்யலாம், தமிழகத்தில் எதுவும் நடக்காது என்று கூறிய அவர், அண்ணாமலையை நாங்கள் பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. அவரை நாங்கள் ஒரு ஜோக்கராக தான் வைத்துள்ளோம் என்றார்.