பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் என் மண் என் மக்கள் நடைபயணம் அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை தமிழ்நாடு முழுக்க நடைப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் இந்த நடைபயணம் பல கட்டங்களாக நடைபெற்று வருகின்றது.

மூன்றாம் கட்ட நடை பயணம் வருகின்ற அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் உடல் சோர்வு, இருமல் மற்றும் தொண்டை வலி பிரச்சனை இருப்பதால் மேலும் இரண்டு வாரங்கள் ஓய்வு எடுக்குமாறு அண்ணாமலைக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.