கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் அருகே எம்.ஆர்.கே நகரில் லாரி டிரைவரான ராஜசேகர் என்பவர் வந்துள்ளார். இவரது மனைவி ஜெயப்பிரியா செட்டிபாளையம் பேரூராட்சி 13-வது வார்டு திமுக கவுன்சிலராக இருக்கிறார். இந்நிலையில் ராஜசேகரின் அண்ணன் மருதபாரதி கடன் பிரச்சனை காரணமாக தலைமறைவாக இருக்கிறார். கடந்த சில நாட்களாக அண்ணனை பார்க்காமல் மன உளைச்சலில் இருந்த ராஜசேகர் டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார்.

இதனையடுத்து போதையில் சமத்துவபுரம் அருகே இருக்கும் காட்டிற்கு சென்று சாணி பவுடரை கரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜசேகரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.