தற்போது ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவம் போட்ஸ்வானாவிலுள்ள செலிண்டா ரிசர்வ் ஸ்பில்வேவில் நடந்திருக்கிறது. இதில் 3 சிங்கங்கள் போட்ஸ்வானாவிலுள்ள செலிண்டா ரிசர்வ் ஸ்பில்வேயில் ஒரு ஆற்றைக் கடக்க முயன்றது.

அப்போது ஒரு நீர் யானை உடனே 3 சிங்கக்கத்தையும் வளைத்து பிடித்தது. மேலும் அதன் வலிமை மற்றும் பிராந்திய ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் தண்ணீரில் சிங்கங்களில் ஒன்றை தாக்கத் தொடங்கியது. இதுகுறித்த வீடியோவானது தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.