முதல்வர் ஸ்டாலின் மீது நேரடியாக ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி அண்ணாமலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். டெண்டர் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு சிங்கப்பூர் நிறுவனம் ரூ.200 கோடி கொடுத்ததாகவும், இந்த பணம் 2011ஆம் ஆண்டு திமுகவின் தேர்தல் செலவுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், அமைச்சர்கள் எ.வ. வேலு, கே.என்.நேரு மற்றும் கனிமொழி எம்.பி ஆகியோரின் சொத்து பட்டியலையும் வெளியிட்டுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் ஆட்சியிலிருந்த அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.