ரஷ்யாவில் செர்பியா பிராந்தியம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் மட்டும் திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி முற்றிலுமாக இடிந்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இதில் இரண்டு வயது பச்சிளம் குழந்தை உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.