அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பச்சிளம் குழந்தை அழுததால் தாய் மது ஊட்டிய சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஹானஸ்டி டி லா டோரே என்ற பெண் தனது குழந்தைக்கு மது கொடுத்த பிறகு மயக்கமடைந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து குழந்தைக்கு மது கொடுத்த தாய் மீது மருத்துவர்கள் புகார் அளித்தனர். குழந்தை அழுததால் தான் அவ்வாறு செய்ததாக தாய் கூறியதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். குழந்தையின் உடல்நிலை குறித்த விவரங்களை டாக்டர்கள் இன்னும் தெரிவிக்கவில்லை.