தமிழ் சினிமாவில் பிரபலமாக இருப்பவர் தான் இசையமைப்பாளர் தேவா. இவர் கடந்த 1986ம் வருடம் மனசுக்கேத்த மன்னாரு திரைப்படத்தின் வாயிலாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் பல முன்னணி நடிகர் படங்களுக்கு இசையமைத்து பாடியும் இருக்கிறார். சென்ற 20 ஆண்டுகளாக இசைத் துறையில் அவர் பணியாற்றி வருகிறார்.

இதனிடையே தேவா பல்வேறு கானா பாடல்களை எழுதி தானே பாடியும் உள்ளார். இவர் இறுதியாக 2021ல் சில்லு வண்டுகள் படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தின் விருது வழங்கும் விழாவில் தேவாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.