தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் படங்களில் ஹீரோவாகவும்  நடித்து வருகிறார். நடிகர் வடிவேலு தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். சில பிரச்சினைகளின் காரணமாக வடிவேலு நடிக்காமல் இருந்த நிலையில் மீண்டும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

தற்போது படங்களில் பிஸியாக நடித்து வரும் வைகைப்புயல் வடிவேலுவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தலைமையின் கீழ் இயங்கும் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் நடிகர் வடிவேலுவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் வடிவேலுவுக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.