பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பூ, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது “தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. பெண்களுக்கு நியாயம் கிடைக்க தொடர்ந்து பாடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை குஷ்பூ பேட்டியளித்ததாவது “எனக்கு மிகப்பெரிய பொறுப்பு கிடைத்திருக்கிறது. பெண்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக நான் இருப்பேன். பெண்கள் பிரச்சனைகளை வெளியில் சொல்ல பயப்படுகிறார்கள். ஆனால் இனி பயப்படாதீங்க, வெளியே வாங்க, உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய அரசுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.