டுவிட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு பின், தற்போது மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான கூகுளும் அதன் பயனாளர்களுக்கு நீல நிற சரிபார்ப்பு அடையாளத்தை கொடுக்கும். இதன் வாயிலாக மக்கள் சரியான பயனரிடம் இருந்து மின் அஞ்சலை பெறுகிறார்களா என்பதை ஈஸியாக அடையாளம் காண இயலும். இவை மக்களை மோசடியிலிருந்து காப்பாற்றுகிறது.

இந்த அம்சமானது வெளியிடப்பட்டு இருப்பதாகவும், இது Google Workspace, G Suite Basic மற்றும் Business-ன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் எனவும் கூகுள் தெரிவித்து உள்ளது. மேலும் தனிப்பட்ட கூகுள் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் இச்சேவை வழங்கப்படுகிறது. BIMI அம்சத்தை தேர்ந்தெடுத்து உள்ள நிறுவனங்கள் தானாகவே செக்மார்க்கை பெறும்.