இன்றைய நவீன காலகட்டத்தில் டெக்னாலஜி வளர வளர மின்னணு சாதனங்களின் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஸ்மார்ட் வாட்ச்கள் இன்று உச்சபட்ச வரவேற்பை பெற்றுள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் வாட்ச்கள் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில், இப்போது ஸ்மார்ட் ரிங் இந்திய சந்தைக்கு வரவிருக்கிறது.

ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் இயர் பட்ஸ் மூலம் பிரபலமடைந்த BoAt, ஆரோக்கியத்தை கண்காணிக்கும் ஸ்மார்ட் மோதிரத்தை அறிமுகப்படுத்துகிறது. அல்ட்ராஹுமன் என்ற பிராண்ட் இந்தியாவில் முதன்முறையாக ஸ்மார்ட் வளையங்களை அறிமுகப்படுத்த முன்முயற்சி எடுத்தது. BoAt-ன் புதிய ஸ்மார்ட் ரிங் பீங்கான் மற்றும் உலோக கலவையால் ஆனது. இது வாட்டர் புரூஃப் வசதியுடன் வருகிறது.