உத்தரபிரதேசம் ஜான்சி மாவட்டம் விராங்க லட்சுமி பாய் ரயில் நிலையத்துக்கு இரண்டு பெண்கள் வந்துள்ளனர். அந்த பெண்களிடம் அறிமுகம் செய்து கொண்ட ராணுவ வீரர் ஒருவர், தன் செல்போன் செயலிழந்து போனதாகவும், உறவினரிடம் பேச செல்போன் தருமாறும் அவர்களிடம் கேட்டுள்ளார். பெண்களிடமிருந்து செல்போனை வாங்கிய அவர் ராணுவ வீரர்களுக்கான பெட்டியில் ஏறிக்கொண்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ராணுவர் வீரர் ரயில் பெட்டியினுள் ஏறுமாறு பெண்களை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

அதன்படி இரண்டு பெண்களும் ரயில் பெட்டியினுள் ஏறிய நிலையில், அங்கு ஏற்கனவே இரு ராணுவ வீரர்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதன்பின் ராணுவ வீரர்கள் ஒன்று சேர்ந்து 2 பெண்களையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெண்கள் அளித்த புகாரின் படி காவல்துறையினர் ரயில் நிலையம் வந்தனர். பின் இரண்டு ராணுவ வீரர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மற்றொரு ராணுவவீரர் தலைமறைவானதாக கூறப்படுகிறது. தற்போது தலைமறைவான ராணுவ வீரரை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.