தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் ஜோதிமணி அழுதுகிட்டே இருக்க வேண்டியது தான் வெற்றி பெறப் போவதில்லை என்று நடிகை காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.

கரூரில் போட்டியிட்டால் டெபாசிட் கிடைக்காது என்பதால் அண்ணாமலை கோவைக்கு சென்று உள்ளதாக விமர்சித்த அவர், எங்கே சென்றாலும் அவருக்கு தோல்வி மட்டுமே பரிசாக கிடைக்கும் என்றார். மேலும் பேசிய அவர், தேர்தலுக்குப் பிறகு அண்ணாமலையை கர்நாடகத்திற்கே தமிழக மக்கள் அனுப்பி வைப்பார்கள் என்றும் தெரிவித்தார்.