மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழர் தேசிய முன்னணி நிறுவன பழ. நெடுமாறன் அறிவித்துள்ளார். மீண்டும் பாஜக வெற்றி பெற்று விடுமானால் எதிர்காலத்தில் ஜனநாயகமே நம்முடைய நாட்டில் நிலவாது என்றும் மத சிறுபான்மையினர் ஒதுக்கப்படுவார்கள் என்றும் கவலை தெரிவித்துள்ளார். அத்துடன் திமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்