மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை மற்றும் ஓய்வூதியதற்கான திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சலுகைகளை வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் தற்போது அரசு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த அறிவிப்பை அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

அதேசமயம் அங்கன்வாடி ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்திற்காக இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் மற்றும் ஓய்வூதிய நிதி திட்டங்களை நிர்வகிக்கும் சில வங்கிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. எல் ஐ சி மற்றும் வங்கிகள் தங்களுடைய முன்மொழிவை சமர்ப்பித்ததும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அதனை ஆய்வு செய்து அமைச்சராவை ஒப்புதலுக்கான இறுதிக்கட்டத்தை தயாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.