அக்னி பாத் திட்டத்தின் கீழ் இராணுவத்திற்கு பெண்கள் படைக்கான தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடலூரில் உள்ள அண்ணா மைதானத்தில் செவ்வாய்க்கிழமை(இன்று) ஆன்லைன் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. நுழைவுச்சீட்டு பெற்றவர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் சான்றிதழ், ஆவணங்களுடன் நேரில் வரவேண்டும்.

இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் விண்ணப்பதாரர்கள் சென்னை கோட்டை செயின்ட் ஜார்ஜ் வளாகத்தில் உள்ள ஆள்சேர்ப்பு அலுவலகத்தை 044-25674924 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். ஆட்சேர்ப்பானது  தானியங்கி முறையில் நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் நடைபெற உள்ளது.