ஆந்திர மாநிலத்தில் தசரா பண்டிகைக்காக பள்ளிகளுக்கு கடந்த அக்டோபர் 14ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை தொடர்ந்து பள்ளிகள் அனைத்தும் அக்டோபர் 25ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் கல்லூரிகள் அக்டோபர் 19 முதல் அக்டோபர் 25 வரை விடுமுறையில் இருக்கும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

இதனை அனைத்து மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர்களும் தங்கள் அதிகார வரம்பில் உள்ள ஜூனியர் கல்லூரி நிர்வாகங்களை ஒரே விடுமுறை அட்டவணையை கடைப்பிடிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு மாநிலத்தில் விருப்ப விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அக்டோபர் 24ஆம் தேதி பொது விடுமுறை தினமாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால் மாநிலத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.