கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஹைகிரவுண்ட் பகுதியில் இரவு நேரத்தில் 2 வாலிபர்கள் மூதாட்டியுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த சிலர் மூதாட்டியிடம் விசாரித்த போது அவர் ஒரு ஹோட்டலில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருவது தெரியவந்தது. இந்நிலையில் வேலை முடிந்து நள்ளிரவு நேரத்தில் வீடு திரும்பும் போது, போதையில் வந்த வாலிபர்கள் மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு அளித்தனர்.

இதனை கேட்டதும் பொதுமக்கள் 2 வாலிபர்களையும் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அந்த வாலிபர்கள் திருவண்ணாமலையில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகின்றனர். கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தவர்கள் மது போதையில் இளம்பெண் என நினைத்து மூதாட்டியிடம் தகராறு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு வாலிபர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் 4 பேரையும் பொதுமக்கள் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.