கடலூர் மாவட்டத்தில் உள்ள புலிவளம் பகுதியில் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமர்நாத்(21) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய கல்லூரி மாணவிக்கும், அமர்நாத்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அமர்நாத் சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற அன்று அமர்நாத் சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது அத்துமீறி உள்ளே நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் திருமணம் செய்து கொள்ள அமர்நாத் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமி திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அமர்நாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.