கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினம் கபிலர் தெருவில் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இவருக்கு ராஜன், ராமச்சந்திரன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு அண்ணன், தம்பி இருவரையும் திருப்பாதிரிப்புலியூர் குப்பங்குளத்தை சேர்ந்த சந்தோஷ், விஜய், பரமேஷ், பிரியதர்ஷன் ஆகிய நான்கு பேரும் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயன்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சந்தோஷ் உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கினை விசாரித்த கடலூர் இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றம் சந்தோஷ், விஜய் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், பரமேசுக்கு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், பிரியதர்ஷனுக்கு 6 மாத ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் சந்தோஷ், விஜய் ஆகியோருக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.