கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ குண்டலப்பாடி பகுதியில் நல்லான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்த வினோத்தை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த வினோத் தனது வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி விட்டார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து வினோத் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வினோத் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.