கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கொத்த கொண்டபள்ளி கிராமத்தில் ராஜப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரம்மா என்ற மனைவி உள்ளார். இவர்களது பக்கத்து வீட்டில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி சங்கரம்மா தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது சந்தோஷ் வீட்டிற்குள் நுழைந்து உங்களது மகன் எங்கே என கேட்டதாக தெரிகிறது.

அதற்கு சங்கரமா பதில் அளித்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சந்தோஷ் தனது நண்பர்களான பாபு, கிரண்குமார், பரத் ஆகியோருடன் இணைந்து சங்கரம்மாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சங்கரம்மா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.