கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்ன கொத்தூர் பகுதியில் செம்பருத்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான செம்பருத்தி பிரசவத்திற்காக கிருஷ்ணகிரியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 14-ஆம் தேதி மூன்றாவதாக செம்பருத்திக்கு பெண் குழந்தை பிறந்தது.

மறுநாளே அந்த குழந்தை திடீரென இறந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.