திருச்சி மாவட்டத்தில் உள்ள மணிகண்டன் அருகே இருக்கும் அம்பேத்கர் நகர் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித்(22) என்ற மகன் இருக்கிறார். இவர் 12-ஆம் வகுப்பு வரை படித்து முடித்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 5-ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமிக்கு அஜித் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த போலீசார் அஜித்தை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.