கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாணம் பாளையம் கட்டபொம்மன் நகரில் தூய்மை பணியாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் இருந்த குப்பை தொட்டிக்கு அருகே கட்டப்பை கிடந்தது. அதில் குழந்தை அழும் சத்தம் கேட்டதால் தூய்மை பணியாளர்கள் பையை திறந்து பார்த்தனர். அப்போது பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை தொப்புள் கொடியுடன் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண் குழந்தையை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் பின்னர் குழந்தை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் குழந்தையை சாலையோரம் வீசி சென்ற தாய் யார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.