கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பது தெரியவந்தது. அவர் வீட்டிற்கு பின்புறம் மது விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் முருகனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.