கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிக்கலாம்பாளையம் மரக்கடை அருகே மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கோட்டைசாமி என்பதும், அப்பகுதியில் மது விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கோட்டைசாமியை கைது செய்ததோடு அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.