கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் பி.ஜி.பி அப்பார்ட்மெண்டில் டாக்டரான கோகுல்நாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இந்நிலையில் கோகுல்நாத் கிரெடிட் கார்டு மூலம் அதிக அளவு கடன் வாங்கியதாக தெரிகிறது. அந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் கோகுல் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் தனது மனைவியிடம் வெளியே சென்று வருவதாக கோகுல்நாத் கூறினார்.

இதனையடுத்து சிங்காநல்லூர் காமராஜர் ரோட்டில் இருக்கும் தனியார் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி கோகுல்நாத் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோகுல் நாத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.