கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்குமாரமங்கலம் பகுதியில் கையில் கத்திய வைத்துக்கொண்டு வாலிபர் பொதுமக்களை மிரட்டியுள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி ரெட்டிசாவடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரிக்க முயன்றார்.

அப்போது திடீரென அந்த வாலிபர் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த முயன்றதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதனால் அரசு பணி செய்ய விடாமல் தடுத்த அந்த வாலிபரை சப்-இன்ஸ்பெக்டர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் அவர் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த சக்தி என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சக்தியை கைது செய்தனர்.