கடலூர் மாவட்டத்தில் உள்ள கருப்பு கேட் பகுதியில் சீனிவாசன்- மீரா(60) தம்பதியினர் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் மீரா அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீரா மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மீராவை அருகில் இருந்தவர்கள் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மீரா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.