தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் வரலட்சுமி சரத்குமார். இவர் பெரும்பாலும் வில்லி வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு கடந்த சில மாதத்திற்கு முன்பு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமண தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் நிக்கோலாய்க்கு ஏற்கனவே திருமணம் ஆகி 16 வயதில் ஒரு மகள் இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது அவருக்கு கவிதா என்ற பெண்ணுடன் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியுள்ளது. இதில் கவிதா கலிபோர்னியாவில் உலக அழகி பட்டம் வென்றவர் என்று கூறப்படுகிறது. அதோடு வரலட்சுமி பணத்திற்காகத்தான் அவரை திருமணம் செய்து கொள்கிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் நிலையில் அவர் மீது பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் தன்மீது வரும் விமர்சனங்களுக்கு தற்போது நடிகை வரலட்சுமி பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, என் மீது வரும் விமர்சனங்கள் பற்றி நான் கவலைப்படவில்லை. அவர் என் பார்வையில் அழகாக இருக்கிறார். எங்களைப் பற்றி தவறான கருத்துக்களை கூறுபவர்கள் பற்றி நான் கவலைப்படுவதில்லை. அதற்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும். என் தந்தை கூட இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். அவர் தற்போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார். என் காதலரின் பெற்றோர் ஆர்ட் கேலரியை நடத்துகிறார்கள். அவரும் அவருடைய மகளும் பவர் லிப்டிங்கில் தங்கப்பதக்கம் வென்றவர்கள். மேலும் எல்லாம் நன்றாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.