கடலூர் மாவட்டத்தில் உள்ள பழைய வண்டிபாளையம் பகுதியில் விவசாயியான ஜெயக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயக்குமார் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் முட்புதற்களை அகற்ற சென்றதாக தெரிகிறது. அங்கு மர்மமான முறையில் ஜெயக்குமார் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெயக்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஜெயக்குமாரை யாராவது அடித்து கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.