தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூரில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 1- ஆம் தேதி சிறுமிக்கும் அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இதுகுறித்து அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் விரிவாக்க அலுவலர் சாந்தி விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் முருகன் 17 வயது சிறுமியை திருமணம் செய்தது உறுதியானது.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் முருகன், அவரது தாய், தந்தை சிறுமியின் தாய், பாட்டி ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.