திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பதைக்கம் கிராமத்தில் விவசாயியான இசக்கி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். அதே பகுதியில் வசிக்கும் முத்து சரவணன் உடன் முருகன் அடிக்கடி ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று வந்துள்ளார். இது இசக்கிக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. இதனால் இசக்கி முத்து சரவணனை கண்டித்தார்.

இதனால் ஏற்பட்ட தகராறில் முத்து சரவணன் இசக்கியை கம்பல் தாக்கியுள்ளார். இதனை தடுக்க வந்த முருகனையும் அவர் கம்பாள் தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முத்து சரவணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.