திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எர்ணாவூர் பாரதிநகரில் கூலி வேலை பார்க்கும் ராஜி என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ராஜி ராமகிருஷ்ணா நகர் அருகே தலையில் காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜியின் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

அவர் இறந்து கிடந்த இடத்திற்கு அருகே ராஜியின் மோட்டார் சைக்கிள் சாய்ந்து கிடந்தது. எனவே மோட்டார் சைக்கிளில் வரும்போது கீழே விழுந்து தலையில் அடிபட்டு ராஜி இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.